"..திருவல்லிக்கேணியில் வசித்த ஒருவர் வேறு வீடு போகவேண்டும் என்றாலும் திரும்பத் திரும்பத் திருவல்லிக்கேணிக்கே வந்துவிடுவான். அவனுக்கு இந்த உலகத்திலேயே வேறெந்த இடமும் மனதுக்குகந்ததாக இருக்காது.." - கு.அழகிரிசாமி, எழுத்தாளர். சென்னையில் வாழ்வது ஒரு சுகமென்றால், சென்னையில் பேச்சிலராக இருப்பதும் 'ஒரு வகையில்' சுகமே??? இதற்கு முன் பெங்களூரு, பெங்களூர்-ஆக இருந்த பொழுது அங்கே ஒரு 15 மாதங்கள் குப்பை கொட்டியிருக்கிறேன். அப்பொழுது பல விஷயங்களில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறோம். Cost of living, போக்குவரத்து நெரிசல் முக்கியமாக உணவு. இரவு 8.30-க்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு தான், வண்டியை எடுத்துக் கொண்டு அலையவேண்டியிருக்கும். அதுவும் 'அந்த' சாப்பாட்டுக்கே! சாம்பாரில் அதிகமான மிளகாய் பொடியும் பின் அதனை ஈடுகட்ட இனிப்பான பூசணிக்காய் அல்லது வெல்லம் கரைத்திருப்பார்கள். ஒரே இரத்த நிறமாக இருக்கும். வட இந்திய உணவு வகைகள் இருக்கும், ஆனால் இட்சி, தோசை, சாதம் சாப்பிட்டு பழக்கம் ஆனதால் லேசில் பிடிக்காது. சுனாமி வந்து மூன்றாவது நாள், நண்பர்களின் பயமுறுத்தலையும் மீறி(?)...
Comments
- சுட்டியில் போய் பாருங்கள். அலுவலகக் கணிணியாக இருந்தால்.. யூடியூப் பார்க்கும் வசதி தடை பட்டிருக்கலாம்.
:(
எங்கயோ போயிட்டீங்க(டோம்).
ஆமா, கவிஞர் பாலபாரதின்னு போட்டாங்களே? கவிஞரா நீங்க மெய்யாலுமே? லிங்க் குடுங்களேன் உங்க கவுஜய படிக்கறேன். நன்றி.
தூயா, இது உண்மைதானே.. அந்த மொட்டைத் தலையில் நீங்க உங்களைப் பார்த்தால், குட் லுக்காக பளிச்சென்று தெரியும்.. ;)
மக்கள் தொலைக்காட்சியின் ரிப்போர்ட்டரிடம் கவிஞர் போட சொன்னது நான் தான்.
குயில் தோப்பு வெளியிட்டிருக்கும் அவரின் கவிதைத் தொகுப்புகளை காசு கொடுத்து வாங்கிப் படிக்கவும். ஓசியில் கும்மி அடிக்க நினைக்க வேண்டாம்.
தூயா, இது உண்மைதானே.. அந்த மொட்டைத் தலையில் நீங்க உங்களைப் பார்த்தால், குட் லுக்காக பளிச்சென்று தெரியும்.. ;)//
நீங்கள் அனுபவப்பட்டிருப்பிங்க..கேட்டு தானே ஆகணும் பொன்ஸ்..(அதிகம் எழுதினால் பாலாண்ணா திட்டுவார்..அப்புறமா ரகசியமா பேசலாம் பொன்ஸ்)
ஆபிஸ்ல யூடியுப் கட்டூ :((((((
சென்ஷி
ஒரே பொறாமையா இருக்கு :)))))
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் - மக்கள் தொலைக்காட்சி குழுமத்தினருக்கு
;)
ஆமா, எல்லோரும் வட்டமா இருக்கறப்ப ஒருத்தர் ( சிகப்புச்சட்டைக்காரர்)
சுத்தி சுத்தி வராறே..'குலகுலயா( கொலை கொலையா) முந்திரிக்கா' விளையாட்டா? :-)))))