விக்கி நன்றியுரை கூற, பாலாபாய் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர்களை அறிமுகப்படித்தி வைத்தார் சென்னை வலைப்பதிவர் பட்டறை வெற்றிகரமாகவும், சிறப்பாக நடந்து முடிந்தது!!!
சென்னை வலைப்பதிவர் பட்டறை தற்பொழுது நிலவரப்படி சுமார் 400க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்!!! முதல் மாடியில் ஒரு அரங்கில் பினாத்தலார் flash பற்றி பினாத்திக்கிட்டு இருக்கார்!!! சிங்கையிலிருந்து குழலி தொலைப்பேசியில் நிகழ்ச்சியின் நிலவரங்களை கேட்டறிந்தார் ;) முதன்மை அரங்கில் இணையத்தில் இன்றைய நுட்பமும் நாளைய தொழிலும் என்ற தலைப்பில் அருண்குமார் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்! இட்லிவடை முதன்மை அரங்கில் சைலண்டா ரிப்போர்ட் செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது! அதை தொடர்ந்து பல குழுக்கள் இட்லிவடையை கையும் மடிக்கணினியுமாய் பிடிக்க ரெடியாகி வருவதாக கேள்வி ;)