Posts

Showing posts with the label நிகழ்வுகள்

சென்னை நினைவுகள் - உண்மைத்தமிழன் (விருந்தினர் பத்தி)

1995-ம் ஆண்டு ஜனவரி 1. என் வாழ்க்கையில் நடந்த திருப்பங்களில் முதன்மையானது சென்னையில் கால் பதித்த இந்த நாள்தான். சென்னையில் நான் பார்க்கச் சென்று மீள முடியாமல் மூழ்கியது கன்னிமாரா நூலகத்தில்தான். திண்டுக்கல், மதுரை என்று வாசம் செய்த ஊர்களிலெல்லாம் நூலகங்களை இரண்டாவது வீடாக வைத்திருந்த நான் சென்னைக்கு வந்ததும் முதல் ஞாயிற்றுக்கிழமை கன்னிமாராவில்தான் கழித்தேன். எத்தனை, எத்தனை புத்தகங்கள்? படிக்க நேரம்தான் கிடைக்கவில்லை. இப்போதும் தொடர்ந்து பத்து வருடங்களாக அந்நூலகத்தின் உறுப்பினராக இருந்து வருகிறேன். தொடர்ந்து சென்னையை வலம் வர ஆரம்பித்தேன் புது மாப்பிள்ளை, பொண்ணுடன் ஊர், ஊராகச் சென்று விருந்து சாப்பிடுவானே அது மாதிரி.. எப்போதும் எனக்குப் பிரியத்திற்குரிய சினிமா தியேட்டர்களை, சாயந்தர வேளைகளில் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தேன். தமிழ்ப் படங்களைவிட ஆங்கிலப் படங்களே எனக்கு அதிகம் பிடித்தன. தேவி, சத்யம், ஆனந்த் மூன்று காம்ப்ளக்ஸ்களிலும் ஒரு விடுமுறை நாளில் நான்கு ஷோவும் பார்த்துவிட்டுத்தான் சைக்கிளில் அசோக் நகர் சென்றடைவேன். அன்றைக்கு எனக்கு இருந்த சினிமா ஆசையை வெறியாக மாற்றி என்னை வெறிநாய் கணக்...

சிங்காரச் சென்னை - தமிழ்நதி (விருந்தினர் பத்தி)

எழுத்துக்கும் எனக்குமிடையில் ஒருவித இடைவெளி விழுந்துவிட்டதை,தொடர்பறுந்த நிலையில் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்,சென்னைப் பட்டினம் பற்றி எழுதும்படி பொன்ஸ் கேட்டிருக்கிறார். சென்னையைப் பற்றி ஏற்கெனவே இரண்டு தடவைகள் எழுதிவிட்டேன். அதன் சாயல் இந்தப் பதிவிலும் இடம்பெறக்கூடும் என்ற அச்சம் மேலிடுகின்றபோதிலும் பிரியத்திற்குரியவர்கள் கேட்கும்போது மறுக்க முடியவில்லை. இந்த வரியை எழுதும்போது அடுத்த வரி என்ன எழுதப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது. எந்த நகரமாக இருப்பினும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் அப்போதைய மனோநிலையைப் பொறுத்தே பார்வைகளும் அமையும். மரணங்கள் மலிந்த பூமியில் சவப்பெட்டிகள் செய்பவன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலொத்ததெனும் குரூரமான உதாரணத்தையே இங்கும் சுட்டவேண்டியிருக்கிறது. இரக்கமேயில்லாமல் வெயில் எறித்து எரிக்கும் கொடுங்கோடை நாட்களில் சென்னையைச் சபித்திருக்கிறோம். அதிலும் க்குவரத்து நெரிசலுள் மாட்டிக்கொள்ள நேரும்போது உடல் கொதித்துப் போகிறது. மனம் கோபத்தினால் செய்யப்பட்டதாகிவிடுகிறது. உரசினால் பற்றிக்கொள்ளுமோ என்றஞ்சுமளவிற்கு உடல்கள் வெயிலை வேண்டுமளவிற்குக் க...

சென்னை/ பக்கத்துவீட்டு ஜன்னல் புன்னகை - த. அகிலன் (விருந்தினர் பத்தி)

சென்னை என்கிற வார்த்தை எனக்குத் தெரிகிறபோது. ஒரு 8 வயதிருக்கும். கட்டுங்கடங்காமல் காட்டுக்குள் குகைகளிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் விசத்திரக்குள்ளர்களையும், முகமூடி வீரர் மாயாவியையும் அவரது காதலி டயானாவையும் ராணி காமிக்ஸ் புத்தகத்தில் புரட்டி முடிந்து ஆவலடங்காமல் கடைசி மட்டைவரை படித்துவிடுகிறபோது எனக்கு தெரிந்த வார்த்தை சென்னை- 600018 என்று நினைக்கிறேன். பிறகு சென்னை இந்திய புத்தகங்கள் வழியாகவும் சினிமா வழியாகவும் மிகவும் பரிச்சயமான பக்கத்து வீட்டு ஜன்னலில் ஒளிர்கிற புன்னகை போலாகிவிட்டது. நான் சென்னையில் வசிக்கநேரிடும் என்று அப்போதெல்லாம் நான் நினைத்து பார்த்தது கிடையாது. இப்போது நான் ஒரு சென்னை வாசி. அதன் பிரமிப்புக்களை எல்லாம்தாண்டி அதன் வாழ்வியலுக்குள் என்னை நுழைத்துக்கொண்டு விட்ட சராசரி நகரவாசியான பின்பு எனது கற்பனையில் இருந்த சென்னை கொஞ்ச இடங்களில் தகர்ந்து போய்விட்டிருக்கிறது. கொஞ்ச இடங்களில் இன்னும் ஒரு பெரிய நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கிறது. ஒரு திசை தெரியாப் பயணியைப்போல் நான் நுழைந்த ஆரம்பங்களில் சென்னை என்னை திக்குமுக்காட வைத்திருக்கிறது. இந்தப் பெருநகரின் வாய் எங்கே...

தினகரன் வசந்தம்: பதிவர் சந்திப்பு செய்தி

Image
நன்றி:- லக்கிலுக்

சென்னை சந்திப்பு - 22 ஏப்ரல் - 2

சென்னபட்டினம் குழுவின் மூலம் இதுவரை மூன்று வலைபதிவர் சந்திப்புகள் நிகழ்த்தியுள்ளோம். நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஆகஸ்ட் 2006 இல் முதல் சந்திப்பு நிகழ்ந்த போது, முத்து தமிழினி, முத்துகுமரன், பரஞ்சோதி, வரவனையான் உள்ளிட்ட வெளியூர்/வெளிநாடு வாழ் பதிவர்கள் கலந்து கொண்டார்கள். அனானி பின்னூட்டங்களால் உருவாகிக் கொண்டிருந்த பிரச்சனை பற்றிய விவாதங்களின் முடிவில் அனானி முன்னேற்றக் கழகம் உருவாக முதலடி இந்தச் சந்திப்பில் தான் எடுத்து வைக்கப்பட்டது. நவம்பர் 2006இல் நிகழ்ந்த அடுத்த சந்திப்பு, தேனாம்பேட்டை பார்வதி ஹாலில் நிகழ்ந்தது. (வி)யெஸ்கே, அகிலன், நிலவன், தமிழ்நதி போன்ற வெளிநாடுவாழ் பதிவர்கள் தவிரவும் பல புதிய பதிவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு அது. தமிழ்வலைபதிவர் உதவிக் குழு இந்தச் சந்திப்பில் உருவம் பெற்றது. தற்போது புதிய பதிவர்களுக்கு உதவியாக செயல்பட்டு வரும் இந்தக் குழுவில் சென்னை பதிவர்கள் மட்டுமல்லாமல் உலகளாவிய பதிவர்கள் பலரும் இருந்து உதவி வருகின்றனர். டிசம்பர் 2006 இல், நடேசன் பார்க்கில் திரு அவர்களின் சென்னை வருகையை ஒட்டி நடைபெற்றது அடுத்த சந்திப்பு. இந்தச் சந்திப்பில் நிகழ்ந்த கருத்துப் பரி...

ஆர்ப்பரிக்கும் கடலலை - Fusion

Image
அந்திவானத்தில் சூரியன் நிகழ்த்திய நிற வேடிக்கைக்கு போட்டியாய் மேடையில் வர்ண ஒளிவிளக்குகள் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தன. என்றும் கடல் அலையின் சத்தம் ஓங்கி இருக்கும் இடத்தில், மக்களின் சத்தத்தில் கடல் அடங்கி இருந்தது. இடம் கண்டுபிடித்து மண்ணில் கால் புதைய நடைக்கையிலேயே கணீரென ஒரு பெண் குரல் பாட்டு பாடியபடி இருந்தது. அடடா நேரமாச்சோ என்றபடி ஓடிப்போனால், அட அது ஒலிப்பெருக்கிச் சோதனை. ஆம், நீங்கள் நினைப்பது சரிதான் அது பெசன்ட் நகர் கடற்கரையில் 'சென்னை சங்கமத்தின்' நிறைவுநாள் நிகழ்ச்சியேதான். இனி நேரடி ரிப்போட். மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் எனச் சொல்லியிருந்தார்கள். சரியாக 6.10 க்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போதே அநேக முக்கிய விருந்தினர்களும் வந்துவிட்டிருந்தார்கள். இந்த பத்து நிமிட தாமதம் கூட ஒலி ஒளி அமைப்பு ஏற்பாடு தாமதத்தினால்தான். முதலில் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் (அவர் தன் பெயரை குறிப்பிடவில்லை) சிறப்பு விருந்தினர் அமைச்சர் பரிதி இளம்வழுதி, இறையன்பு I.A.S, அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி, இந்திரகுமாரி, ராஜாமணி அம்மையார், மலேசிய அமைச்சர் ச...

சென்னை சங்கமம் - நேரடி ரிப்போர்ட

Image
சென்னை சங்கமம் – பறையடி மற்றும் கோலாட்டம்! பெப்ருவரி 21 அன்று மாலை சென்னை கோட்டூர்புரத்தில் மாநகராட்சியால் புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோலாட்டமும், பறையடியும் கோலாகலாமாக நடந்தது. அதற்கு முன்பாகவே புலிவேஷம் கட்டியவர் கலக்கிக் கொண்டிருந்தார். பூம் பூம் மாடு போன்று மனிதர்களே வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்பார்ப்புக்கு மாறாக மக்கள் பெரும் கூட்டமாக கூடியிருந்தார்கள். சாலையோர சிறிய பூங்காவான அதிலேயே சுமார் 300 முதல் 350 பேர் வரை கூடியிருந்து நிகழ்ச்சிகளை ரசித்தார்கள். சுமார் 100 முதல் 150 குழந்தைகள் வரை வந்திருந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்கள். கோலாட்டம் என்பது நாம் சினிமாவில் பார்த்து ரசிக்கும் "தாண்டியா" நடனம் போல இல்லாமல் மிக மிக வித்தியாசமாக இருந்தது. 20 வீரர்கள் வட்டமாக நின்றுக் கொண்டு சுமார் இரண்டரை அடி நீளம் கொண்ட மூங்கில் கழி வைத்து விளையாடினார்கள். இவர்களது ஆட்டத்துக்கேற்ப ஒரு கலைஞர் "உடுக்கை" எனப்படும் இசைக்கருவியை அசுரத்தனமாக வாசித்தார். இது வெறும் நடனமாக இல்லாமல் கோல் சண்டை...

சென்னை சங்கமம் – பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சி!

Image
சென்னை மக்களின் கலை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக "தமிழ் மய்யம்" அமைப்பு "சென்னை சங்கமம்" என்ற ஒருவார விழாவினை நடத்த முன்வந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் உதவியும் இவ்விழாவிற்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இளைய தலைமுறையினருக்கு அறிமுகமில்லாத தமிழகத்தின் பண்பாட்டுக் கலைகளையும், கிட்டத்தட்ட அழிந்துப்போன தமிழின அடையாளங்களையும் மீட்டெடுக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சிகள் அமையும் என நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் சென்னையின் பல்வேறு இடங்களில் பெப்ருவரி 21 முதல் 26 வரை நடத்தப்படும் எனத் தெரிகிறது. தமிழக அரசும் இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்த உறுதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இக்கலாச்சார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேவாரமும், திருப்புகழும் சென்னையின் புகழ்பெற்ற பூங்காக்களில் பாடப்படும் என்றும், தமிழர்களின் இசைக்கலாச்சார அடையாளமான நாதஸ்வர நிகழ்ச்சிகளும் அவற்றோடு ஒன்றிணைந்து நடத்தப்படும் என்று விழா பொறுப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மரங்கள் ...

குறும்பட விழா -செ.பு.க 3

சென்னை புத்தக கண்காட்சியின் பிரிவாக, சர்வதேச-தேசிய குறும்படம் மற்றும் ஆவணப் படத் திரைவிழா நேற்று புத்தக கண்காட்சியின் மூன்றாவது நாளில் தொடங்கியது. பபாசி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருக்கும் இந்தத் திரைவிழா, புத்தக கண்காட்சி அரங்கத்துக்கு வெளியே, சுட்டிவிகடனின் குழந்தைகள் அரங்கத்தை அடுத்து A.K. செட்டியார் அரங்கத்தில் நடக்கிறது செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வந்திருந்து தொடங்கி வைத்தார். திரையிடப்படும் படங்கள் பற்றிய விவரம்: முழுமையாக பார்க்க இயக்குனர் சிவக்குமார் பேசுகையில், த.மு.எ.சங்கத்தினரின் முயற்சியில் தமிழக எழுத்தாளர்கள் பலரும் பங்குபெற்ற குறும்பட பயிற்சிப் பட்டறை போன வருட இறுதியில் நிகழ்ந்தது என்றும், அதன் தொடர்ச்சியாக, இளம் தமிழ் எழுத்தாளர்கள் பலரும், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் எடுக்கும் வேலையில் தற்போது மும்முரமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். மீண்டும் பிப்ரவரியில் கூடி இப்படி எடுக்கப்பட்ட குறும்படங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறப் போவதாகவும் தெரிவித்தார். [கண்காட்சி அரங்கத்திற்கு வெளியில் இருப்பதால், அநேகமாக இந்தத் திரைவ...

சென்னை புத்தகத் திருவிழா Day - 2

Image
முதல் நாள் படங்கள் இங்கே இரண்டாவது நாள் செய்திக்கு இங்கே

மைலாப்பூர் திருவிழா சில காட்சிகள்

Image
சென்னை மைலாப்பூர் பகுதியில் இயங்கி வரும் மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிக்கையும், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய மைலாப்பூர் திருவிழா ஜனவரி 4 முதல் 7ம் தேதி வரை சிறப்பாக நடந்து முடிந்தது. கரகாட்டம், பொய்க்கால் ஆட்டம், நாடகம், இசை விழா, குழந்தைகளுக்கான போட்டி மட்டுமன்றி, இல்லாத்தரசிகளுக்கான போட்டிகள், கோலப்போட்டி, சமையல் போட்டி என நான்கு நாட்கள் ஒரே ஜமாய் தான். தினமும் அத்திருவிழாவினை கவர் செய்து செய்திகள் தர திட்டமிட்டிருந்தோம். ஆனால் அது நிறைவேறாமல் போனது. தனிப்பட்ட பணிகளினால் குழு உறுப்பினர்கள் அனைவருமே சிக்குண்டு போனோம். அதனால் முழுவிழாவினையும் கவர் செய்ய முடிய வில்லை. அவ்வப்போது எட்டிப்பார்த்து எடுத்த படங்களுடன் இந்த பதிவு. மைலாப்பூர் நினைவு படுத்தும் புகைப்பட கண்காட்சி நடந்தது. கடந்த வருட புகைப்படத்தில் ஆர்வத்துடன் தன்னைத் தேடும் தேடும் ஒருவர். புகைப்படங்களை பார்வையிடும் மக்கள். அதே மக்கள் தான் வேறு நிமிடங்களில்.. :) கட்டைகால் நடனம். படம் உதவி தினமலர். கோலம் போடும் வெளிநாட்டுப் பெண்மணி. படம் உதவி: தினமலர் கோலமிடும் அழகு. லாங்க் ஷாட்! சின்னசிறு கைவினைப் பொருட்களுக்காக கடைதிற...

சென்னை காவல்துறைக்கு வயசு 150

Image
தென்னிந்தியாவில் வாசலான சென்னையின் மாநகர காவல்துறை தன் 150 வருடத்தை ஜனவரி 4-ல் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவது தெரிந்ததே. இதன் ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், காவல்துறைக்கு பொதுமக்கள் மத்தியில் எந்த விதமான மதிப்பு இருக்கிறது என்று பார்த்தால், நிலைமை சொல்லிக் கொள்கிறார் போல இல்லை தான். ஆனால், கடந்த 2-3 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையோடு ஒப்பிட்டு பார்த்தால், நிலைமை பொதுவாக ஒரு முன்னேற்றம் காணாப்படுகிறது என்றே சொல்லலாம். பெரும்பாலும் காவல் துறையின் மீது சொல்லப்படும் குற்றங்கள் லஞ்சம், முரட்டுத்தனம் என்று பல குற்றச்சாட்டுக்கள். 70 இலட்சம் மக்கள் தொகை கொண்ட நகரம். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24000+ மக்கள் வசிக்கின்றனர். பொது மக்களின் நண்பனாக இருக்க வேண்டிய காவல்துறை மக்களின் வில்லனாகிப் போனது வேதனை தான். "ஒரு போலீஸ் என்ன துரத்தி வந்துச்சு" "அப்புறம்?" "நல்ல வேளை. ஒரு ரெளடி என்னை காப்பாற்றினான்" - போன்ற துணுக்குகள் சர்வ சாதா'ரண'மாக வெளிவந்துக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் தான் முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான நடராஜ் சென்னை காவல்துறை ஆணைய...

சென்னையில் ஒரு கண்காட்சி

Image
விதவிதமான கலைகளை மனிதன் கண்டுபிடித்து விட்டாலும், ஆதி கலையான ஓவியக் கலையின் சிறப்புகள் தனி தான். கற்காலம் தொட்டே மனிதன் தான் தங்கி இருந்த குகைகளில் எல்லாம் சித்திரங்களால் தங்கள் அடையாளத்தை விட்டு வந்துள்ளான்.ஓவியக்கலை கொஞ்சம் கொஞ்சமாய் மனிதனோடு வளர்ந்தே வந்துள்ளது. பல்வேறு வளர்ச்சி கண்ட ஓவியக்கலை நவீன ஓவியமாக மாறிய போது, சித்திரக்காரனுக்கு மட்டுமல்லாது அதைப் பார்க்கும் பார்வையாளனுக்குள்ளும் பரவசத்தை ஏற்படுத்த தொடங்கியது. அதுவரை வரையப்பட்ட சித்திரங்களின் உணர்வுகள் அப்படியே சித்திரக்காரனின் உணர்வுகளை கடத்தி வந்திருந்தன. அந்நிலையை மாற்றி பார்வையாளனையும், சித்திரக்காரனையும் ஒரே நாற்காலியில் அமரச்செய்த பெருமை நவீன ஓவியத்திற்கு மட்டுமே உண்டு. இன்று பல பத்திரிக்கைகளில் நவீன ஓவியங்கள் மிகச் சாதாரணமாய் வரத்தொடங்கி விட்டது. ஆனந்த விகடனில் தொடராக வந்த எஸ்ராவின் துணையெழுத்துக்கு கிடைத்த அதே வரவேற்பு அத்தொடருக்கு படம் வரைந்த 'டிராஸ்கி'மருது ஓவியத்திற்கும் இருந்தது எல்லோருக்கும் தெரியும். கடந்த வாரம் மூன்று ஓவியர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய ஓவியக்கண்காட்சி நடந்தது; அதற்கு போகும் வாய்ப்பும் கி...