Posts

Showing posts with the label காவல்துறை

ஒரு வழிப்பாதை

கிண்டி ரயில் நிலையம் அருகில் பாலம் ஏறி இறங்கி, போராடி சர்தார் படேல் சாலையில் திரும்ப வலது புறம் ஒதுங்கினால் செல்லம்மாள் கல்லூரி அருகில் வலது புறம் திரும்ப முடியாது என்று பலகை. சில நாட்கள் முன்பு நாளிதழில் படித்திருந்த ஒரு வழிப்பாதை ஏற்பாடு மங்கலாக நினைவு வந்தது. கிண்டியிலிருந்து அடையாறு செல்ல வேண்டுமானால் செல்லம்மாள் கல்லூரியின் எதிரில் காத்திருந்து திரும்பாமல், ஒரு வழிப்பாதையாகி விட்ட அடுத்த பகுதியில் சின்னமலை வரை போக வேண்டும். சின்ன மலையிலிருந்து வலது புறம் திரும்பி ராஜ்பவன் நோக்கிப் போகும் போது சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி போக வேண்டிய வண்டிகளும் சேர்ந்து கொள்கின்றன. ராஜ்பவன் எதிரில் இடது புறம் திரும்பி அடையாறு. வலது புறம் திரும்பி சர்தார் படேல் சாலையிலிருந்து வரும் வாகனங்களுடன் சேர்ந்து கொண்டு வேளச்சேரி சாலைக்குப் போக வேண்டும் வேளச்சேரி நோக்கிப் போக வேண்டியவர்கள். சில கிலோமீட்டர்கள் கூடுதலாக சுற்ற வேண்டியிருந்தாலும், எங்கும் தேங்காமல், காத்திருக்காமல் நான்கு சாலை நிறுத்தங்களை முற்றிலும் ஒழித்து விட்ட இந்த ஏற்பாடு ஏதோ கனவுலகம் போலத் தோன்றியது. வேளச்சேரியிலிருந்து வந்து அடையாறு போக ...

சென்னை காவல்துறைக்கு வயசு 150

Image
தென்னிந்தியாவில் வாசலான சென்னையின் மாநகர காவல்துறை தன் 150 வருடத்தை ஜனவரி 4-ல் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவது தெரிந்ததே. இதன் ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், காவல்துறைக்கு பொதுமக்கள் மத்தியில் எந்த விதமான மதிப்பு இருக்கிறது என்று பார்த்தால், நிலைமை சொல்லிக் கொள்கிறார் போல இல்லை தான். ஆனால், கடந்த 2-3 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையோடு ஒப்பிட்டு பார்த்தால், நிலைமை பொதுவாக ஒரு முன்னேற்றம் காணாப்படுகிறது என்றே சொல்லலாம். பெரும்பாலும் காவல் துறையின் மீது சொல்லப்படும் குற்றங்கள் லஞ்சம், முரட்டுத்தனம் என்று பல குற்றச்சாட்டுக்கள். 70 இலட்சம் மக்கள் தொகை கொண்ட நகரம். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24000+ மக்கள் வசிக்கின்றனர். பொது மக்களின் நண்பனாக இருக்க வேண்டிய காவல்துறை மக்களின் வில்லனாகிப் போனது வேதனை தான். "ஒரு போலீஸ் என்ன துரத்தி வந்துச்சு" "அப்புறம்?" "நல்ல வேளை. ஒரு ரெளடி என்னை காப்பாற்றினான்" - போன்ற துணுக்குகள் சர்வ சாதா'ரண'மாக வெளிவந்துக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் தான் முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான நடராஜ் சென்னை காவல்துறை ஆணைய...

சென்னையும் குற்றங்களும்

பொதுவாகத் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் நடக்கும் குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் நமது காவல் துறையின் பணி பாராட்டுக்குரியது. வெளி மாநிலத்திலிருந்து வந்து சட்டசபை உறுப்பினரைக் கொலை செய்த குற்றத்தைக் கண்டுபிடித்தாகட்டும், குழந்தை ஒன்றை கடத்தி பணம் பறிக்க முயன்று உயிரைப் பறித்து விட்ட மாணவர்களின் செயலாகட்டும், தமது கடன் தொல்லையை மறைக்க களவு நடந்ததாக நாடகமாடிய தம்பதியினரின் குட்டை உடைத்ததிலாகட்டும், காவல் துறை வேகமாகச் செயல்பட்டு செயலின் அடிவேரைக் கண்டு பிடித்து விட்டது. அதன் பிறகு நீதிமன்றங்களில் வழக்கு நடத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும், 'தவறு செய்தால் அதை மறைத்து வாழ்ந்து விட முடியாது' என்று நம்பிக்கை குற்றவியல் துறையிலாவது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சரவணபவன் அதிபராக இருந்தாலும் சரி, காஞ்சி மடத் தலைவராக இருந்தாலும் சரி 'குற்றம் குற்றமே!' என்று செயல்பட முடிவது சமூக அமைப்புக்கு அவசியமானது. 'எவ்வளவுதான் திட்டமிட்டு புத்திசாலித்தனமாகச் செயல்பட்டாலும் குற்றங்களை தடயம் இல்லாமல் மறைக்க முடியாது'...