சென்னைக்குப் பொறந்த நாளு
168 ஆண்டுகளுக்கு முன்பாக, சென்னைப்பட்டினமாக உருவெடுத்த தினம் இன்று.. சென்னை தினத்தை முன்னிட்டு லலித் கலா அகாதமியுடன் இணைந்து இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவுக் களஞ்சியம் என்ற பெயரில் ஒரு கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சி வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற இருக்கிறது. லலித் கலா அகாதமி சேர்மன் பேராசிரியர் பாஸ்கரன் குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் துவங்கிவைத்தார். பல்வேறு கால கட்டத்தைச் சேர்ந்த இந்திய ரூபாய்களையும் காசுகளையும் இங்கே காட்சிப் படுத்தி உள்ளனர் கள்ள நோட்டுகளை அடையாளம் காட்டும் ரசாயன பயிற்சிகளையும் இலவசமாக செய்து காட்டுகின்றனர் பார்வை பறிபோன பிறகு ஓவியர் மனோகர் வரைந்த சென்னை குறித்த சித்திரங்களையும் காட்சிப் படுத்தி யுள்ளனர் சென்னை தினம் குறித்த பிற தளங்கள். 1. விருபாவின் சென்னை வாரம் 2. சென்னை தின நிகழ்வுகள்