இன்று சென்னையில் இருக்கும் மக்களில் பெரும்பான்மையோர், மற்ற ஊர்களில் இருந்து வந்து குடியேறியோர். அதனால், சென்னையின் ஏற்கனவே இருந்த(!) இயல்பான தமிழ்(!) வழக்கொழிந்து போய், எல்லாம் கலந்த சாக்கடை... ம்ஹூம்...பஞ்சாமிர்தமாகி விட்டது. ஆனாலும், வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. 'மெட்ராஸ்' என்பது சென்னையின் பழைய பெயர். எப்போ அரசாங்கம் Madras-ஐ சென்னை-னு மாத்திடுச்சோ, அப்பவே நாமெல்லாம் அந்த பெயரை மறந்திட்டோம். அதான் நியாபகப்படுத்தவேண்டியுள்ளது. 'பாஷை' - சமஸ்கிருத பாஷையிலிருந்து...மன்னிக்க...சமஸ்கிருத மொழியிலிருந்து 'பாஷா' (பாட்ஷா அல்ல) என்ற வார்த்தையை ஸ்வீகரித்துக் கொண்டு, அது மருவி 'பாஷை' ஆனது. அன்று முதல் 'மெட்ராஸ் பாஷை' எங்களின் மொழியானது. 'மெட்ராஸ் பாஷை' - ஒரு வரலாற்று பார்வை மெட்ராஸ் பாஷையின் இலக்கணத்தில் முக்கிய பங்காற்றுவது, ஆங்கிலம் என்னும் மொழி. இந்த ஆங்கில மொழியானது இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மொழி. எம்.ஆர்.ராதா முதல் 'சின்ன(புத்தி) கலைவானர்' விவேக் வரை...
த னது நரைத்த மீசையைக் கம்பீரமாக நீவிக்கொண்டு - ''வண்டியா ஸார் வேணும்?'' என்று ஜட்காவுக்குள்ளே படுத்து இருந்த துரைசாமி மிகவும் மரியா தையாக வண்டியைவிட்டுக் கீழிறங்கி நின்றார். ''நீங்க எத்தனை வருஷமா ஜட்கா ஓட்டிக்கினு இருக்கீங்க?'' என்ற ஒரு கேள்விதான் நான் கேட்டேன். மனுஷன் ஒரு பேட்டிக்கு அல்ல - ஒரு சிறு கதைக்கு அல்ல - ஒரு நாவலுக்கு வேண்டிய விஷயங்களை ஓர் இலக்கியத்தில் வரும் குணச்சித்திரம் போன்று சொல்லஆரம் பித்துவிட்டார். அவ்வளவு சுவை யாக என்னால் அவற்றைத் திருப்பிச் சொல்ல முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ''அம்பது வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சி ஸார், நானும் ஜட்கா ஓட்ட ஆரம்பிச்சு'' என்று தொடங்கியவுடன், தொடக்கத்திலேயே உதடு பிதுக்கலுடன் ஒரு (ஜீணீusமீ) நிதானம். ''அப்போஎல்லாம் ஸார்'' என்று சொல்லி, ஒரு சிறு மௌனம்... அப்புறம் மீசை நீவல்... உதடுகளுக்குள் ஓர் ஏலாமைச் சிரிப்பு... பின்னர் ஒரு பெருமூச்சு! ''ம்... இப்பத்தானே டாக்சிங்க, காருங்க எல்லாம் வந்துடுச்சு. இந்தத் தொயிலுக்கு மரியாதியே பூடிச்சு ஸார்... அந்தக் காலத்திலே வண்டிகளு...
"..திருவல்லிக்கேணியில் வசித்த ஒருவர் வேறு வீடு போகவேண்டும் என்றாலும் திரும்பத் திரும்பத் திருவல்லிக்கேணிக்கே வந்துவிடுவான். அவனுக்கு இந்த உலகத்திலேயே வேறெந்த இடமும் மனதுக்குகந்ததாக இருக்காது.." - கு.அழகிரிசாமி, எழுத்தாளர். சென்னையில் வாழ்வது ஒரு சுகமென்றால், சென்னையில் பேச்சிலராக இருப்பதும் 'ஒரு வகையில்' சுகமே??? இதற்கு முன் பெங்களூரு, பெங்களூர்-ஆக இருந்த பொழுது அங்கே ஒரு 15 மாதங்கள் குப்பை கொட்டியிருக்கிறேன். அப்பொழுது பல விஷயங்களில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறோம். Cost of living, போக்குவரத்து நெரிசல் முக்கியமாக உணவு. இரவு 8.30-க்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு தான், வண்டியை எடுத்துக் கொண்டு அலையவேண்டியிருக்கும். அதுவும் 'அந்த' சாப்பாட்டுக்கே! சாம்பாரில் அதிகமான மிளகாய் பொடியும் பின் அதனை ஈடுகட்ட இனிப்பான பூசணிக்காய் அல்லது வெல்லம் கரைத்திருப்பார்கள். ஒரே இரத்த நிறமாக இருக்கும். வட இந்திய உணவு வகைகள் இருக்கும், ஆனால் இட்சி, தோசை, சாதம் சாப்பிட்டு பழக்கம் ஆனதால் லேசில் பிடிக்காது. சுனாமி வந்து மூன்றாவது நாள், நண்பர்களின் பயமுறுத்தலையும் மீறி(?)...
Comments