விக்கி நன்றியுரை கூற, பாலாபாய் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர்களை அறிமுகப்படித்தி வைத்தார் சென்னை வலைப்பதிவர் பட்டறை வெற்றிகரமாகவும், சிறப்பாக நடந்து முடிந்தது!!!
இன்று சென்னையில் இருக்கும் மக்களில் பெரும்பான்மையோர், மற்ற ஊர்களில் இருந்து வந்து குடியேறியோர். அதனால், சென்னையின் ஏற்கனவே இருந்த(!) இயல்பான தமிழ்(!) வழக்கொழிந்து போய், எல்லாம் கலந்த சாக்கடை... ம்ஹூம்...பஞ்சாமிர்தமாகி விட்டது. ஆனாலும், வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. 'மெட்ராஸ்' என்பது சென்னையின் பழைய பெயர். எப்போ அரசாங்கம் Madras-ஐ சென்னை-னு மாத்திடுச்சோ, அப்பவே நாமெல்லாம் அந்த பெயரை மறந்திட்டோம். அதான் நியாபகப்படுத்தவேண்டியுள்ளது. 'பாஷை' - சமஸ்கிருத பாஷையிலிருந்து...மன்னிக்க...சமஸ்கிருத மொழியிலிருந்து 'பாஷா' (பாட்ஷா அல்ல) என்ற வார்த்தையை ஸ்வீகரித்துக் கொண்டு, அது மருவி 'பாஷை' ஆனது. அன்று முதல் 'மெட்ராஸ் பாஷை' எங்களின் மொழியானது. 'மெட்ராஸ் பாஷை' - ஒரு வரலாற்று பார்வை மெட்ராஸ் பாஷையின் இலக்கணத்தில் முக்கிய பங்காற்றுவது, ஆங்கிலம் என்னும் மொழி. இந்த ஆங்கில மொழியானது இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மொழி. எம்.ஆர்.ராதா முதல் 'சின்ன(புத்தி) கலைவானர்' விவேக் வரை...
சரியாக நான்கு மணிக்கு, இராம.கி அவர்களின் தலைமையில் பாலபாரதியின் முன்னுரையுடன் இனிதே தொடங்கியது சென்னை வலைபதிவர் சந்திப்பு. சந்தித்தவர்கள் விவரம் பின்வருமாறு: அருள்குமார் we the people இராம.கி ஜெ.சந்திரசேகரன் லக்கிலுக் த.அகிலன் தே. நிலவன் வினையூக்கி ஓகை நடராஜன் யெஸ். பாலபாரதி ப்ரியன் தமிழ்நதி பா.ஜெயகமல் கோ. சரவணன் இரா.சமு.ஹமீது எச்.எஸ்.முகமது ரஃபி ரோசாவசந்த் சிமுலேஷன் எஸ்கே பொன்ஸ் மிதக்கும்வெளி தங்கவேல் டிபிஆர் ஜோசப் சிவஞானம் ஜி செந்தில் கௌதம் விக்னேஷ் மரவண்டு கணேஷ் (சந்திப்புப் பதிவேட்டின் வரிசைப்படியே..) பதிவேட்டில் பெயர் எழுதாமல் விட்டுப் போனவை:) டோண்டு பூபாலன் விஜய் - இட்லிவடையின் நிழற்பட வல்லுனர் வலைதிரட்டிகளின் அடுத்த நகர்வு என்ற தலைப்பில் மா.சிவகுமாரின் கட்டுரை வாசிப்பைத் தொடர்ந்து அது குறித்தான ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன. கணினித் தொழிற்நுட்பம் தெரிந்த பதிவர்கள் சேர்ந்து உதவி மையம் ஒன்று தொடங்கலாம் என்றார் விக்கி. அது குறித்த அறிவிப்பொன்று விக்கியின் பதிவில் விரைவில் வரும். சுமார் நாற்பதைம்பது பேரை எதிர்பார்த்து தேநீருக்குச் சொல்லி இருந்தபடியால், முதல் சுற்றுத் தேநீர் வினியோகம் ...
பொழுது போகாமல் விட்டத்தைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்த போது தோன்றிய திட்டம் இது. உடனடியாக செயல் படுத்திப்பார்க்க, முதல் நாள் இரவே பட்டினப்பாக்கத்தில் ஒரு நண்பரின் வீட்டில் போய் 'டேரா' போட்டாகி விட்டது. முதல் பேருந்து அதிகாலை 5.15க்கு என்று முன்னமே விசாரித்து வைத்து விட்டதால் இரவு கைப்பேசியில் அலாரம் வைத்து படுத்து விட்டேன். எப்போதும் படுத்தவுடனே சுழல் மறந்து கனவுகளில் கிழவிகளுடன் (வயசாகிடுச்சுல்ல!) கொஞ்சப் போய் விடுவது வழக்கம். ஆனால்.. அன்றைய இரவு ஏனோ உறக்கம் பிடிக்கவே இல்லை. புதிய இடம் என்பதால் இருக்கலாம். இப்படியும், அப்படியுமாக புரண்டு படுத்ததிலேயே அதிகாலை நான்கு மணியாகி விட்டது. எழுந்து காலைக்கடனை முடித்து, குளிர்ந்த நீரில் குளியல் (நம்புங்க! நெசமாத்தாங்க!!) போட்டு, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் வந்து விட்டேன். திட்டம் இது தான். நான் தினமும் வேலைக்கு போகும் (வித்லோகா-மைலாப்பூரில் இருக்கிறது) பேருந்து 27D. பட்டிணப்பாக்கம் T0 வில்லிவாக்கம். வட சென்னையையும் தென்சென்னையையும் இணைக்கும் பேருந்துகளில் இதுவும் ஒன்று. இதில் முதல் இரு ரவுண்ட் பயணத்தில் பயணிக்க வேண்டும். அதை பதி...
Comments