இன்று சென்னையில் இருக்கும் மக்களில் பெரும்பான்மையோர், மற்ற ஊர்களில் இருந்து வந்து குடியேறியோர். அதனால், சென்னையின் ஏற்கனவே இருந்த(!) இயல்பான தமிழ்(!) வழக்கொழிந்து போய், எல்லாம் கலந்த சாக்கடை... ம்ஹூம்...பஞ்சாமிர்தமாகி விட்டது. ஆனாலும், வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. 'மெட்ராஸ்' என்பது சென்னையின் பழைய பெயர். எப்போ அரசாங்கம் Madras-ஐ சென்னை-னு மாத்திடுச்சோ, அப்பவே நாமெல்லாம் அந்த பெயரை மறந்திட்டோம். அதான் நியாபகப்படுத்தவேண்டியுள்ளது. 'பாஷை' - சமஸ்கிருத பாஷையிலிருந்து...மன்னிக்க...சமஸ்கிருத மொழியிலிருந்து 'பாஷா' (பாட்ஷா அல்ல) என்ற வார்த்தையை ஸ்வீகரித்துக் கொண்டு, அது மருவி 'பாஷை' ஆனது. அன்று முதல் 'மெட்ராஸ் பாஷை' எங்களின் மொழியானது. 'மெட்ராஸ் பாஷை' - ஒரு வரலாற்று பார்வை மெட்ராஸ் பாஷையின் இலக்கணத்தில் முக்கிய பங்காற்றுவது, ஆங்கிலம் என்னும் மொழி. இந்த ஆங்கில மொழியானது இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மொழி. எம்.ஆர்.ராதா முதல் 'சின்ன(புத்தி) கலைவானர்' விவேக் வரை
சென்னைக்கு போறோம் என்று முன்பெல்லாம் சொன்னதும் "அங்க தண்ணி பிரச்சனை ஆச்சே??!!" என்று பயப்படுத்துவது அதிகம் இருந்தது. இப்ப அந்த பிரச்சனை ஓர் அளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் உண்மையில் இன்று நம்ம சென்னைவாசிகளுக்கு பிரச்சனையாக உருவாகிவருவது சென்னைக்குள் சுழன்று வரும் பொது போக்குவரத்து சாதனங்கள்தான்னு சொல்லணும். சென்னைக்குள் எந்த பகுதிக்கு செல்வதானாலும் பஸ், ரயில், MRTS (Mass Rapid Transit System) என பல வழிகள் இருந்தாலும், அதன் கூட்ட நெரிசல், சரியான நேரத்துக்கு வருவதில்லை, பஸ் ஸ்டாண்டுகளில் நிற்காமல் செல்வது போன்ற பல காரணங்களால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் ஆட்டோ என்னும் வசதியை நாட நினைக்கிறார்கள். அந்த வசதி எப்படி நமக்கு உபயோகமாயிருக்கு, அதன் நன்மைகள், அதன் பிரச்சனைகள், ஆட்டோ ஓட்டுனர்களின் நிலை என சில விசயங்களை இங்கு பார்ப்போம். மற்ற பொது போக்குவரத்து வசதிகளை பற்றி அடுத்து வரும் பதிவில் பார்ப்போம். ஆட்டோ: இந்த வசதியை ஆச்சர்யமாக பார்க்கும் வெளிநாட்டினர், சென்னை வந்தால் ஒரு முறையாவது இதில் ஏறி ஒரு சவாரி( பயணம் - சென்னை வட்டாரப் பேச்சு) போக வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆனால் அ
பொழுது போகாமல் விட்டத்தைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்த போது தோன்றிய திட்டம் இது. உடனடியாக செயல் படுத்திப்பார்க்க, முதல் நாள் இரவே பட்டினப்பாக்கத்தில் ஒரு நண்பரின் வீட்டில் போய் 'டேரா' போட்டாகி விட்டது. முதல் பேருந்து அதிகாலை 5.15க்கு என்று முன்னமே விசாரித்து வைத்து விட்டதால் இரவு கைப்பேசியில் அலாரம் வைத்து படுத்து விட்டேன். எப்போதும் படுத்தவுடனே சுழல் மறந்து கனவுகளில் கிழவிகளுடன் (வயசாகிடுச்சுல்ல!) கொஞ்சப் போய் விடுவது வழக்கம். ஆனால்.. அன்றைய இரவு ஏனோ உறக்கம் பிடிக்கவே இல்லை. புதிய இடம் என்பதால் இருக்கலாம். இப்படியும், அப்படியுமாக புரண்டு படுத்ததிலேயே அதிகாலை நான்கு மணியாகி விட்டது. எழுந்து காலைக்கடனை முடித்து, குளிர்ந்த நீரில் குளியல் (நம்புங்க! நெசமாத்தாங்க!!) போட்டு, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் வந்து விட்டேன். திட்டம் இது தான். நான் தினமும் வேலைக்கு போகும் (வித்லோகா-மைலாப்பூரில் இருக்கிறது) பேருந்து 27D. பட்டிணப்பாக்கம் T0 வில்லிவாக்கம். வட சென்னையையும் தென்சென்னையையும் இணைக்கும் பேருந்துகளில் இதுவும் ஒன்று. இதில் முதல் இரு ரவுண்ட் பயணத்தில் பயணிக்க வேண்டும். அதை பதி
Comments