Posts

Showing posts from April, 2007

தினகரன் வசந்தம்: பதிவர் சந்திப்பு செய்தி

Image
நன்றி:- லக்கிலுக்

ஒரு வழிப்பாதை

கிண்டி ரயில் நிலையம் அருகில் பாலம் ஏறி இறங்கி, போராடி சர்தார் படேல் சாலையில் திரும்ப வலது புறம் ஒதுங்கினால் செல்லம்மாள் கல்லூரி அருகில் வலது புறம் திரும்ப முடியாது என்று பலகை. சில நாட்கள் முன்பு நாளிதழில் படித்திருந்த ஒரு வழிப்பாதை ஏற்பாடு மங்கலாக நினைவு வந்தது. கிண்டியிலிருந்து அடையாறு செல்ல வேண்டுமானால் செல்லம்மாள் கல்லூரியின் எதிரில் காத்திருந்து திரும்பாமல், ஒரு வழிப்பாதையாகி விட்ட அடுத்த பகுதியில் சின்னமலை வரை போக வேண்டும். சின்ன மலையிலிருந்து வலது புறம் திரும்பி ராஜ்பவன் நோக்கிப் போகும் போது சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி போக வேண்டிய வண்டிகளும் சேர்ந்து கொள்கின்றன. ராஜ்பவன் எதிரில் இடது புறம் திரும்பி அடையாறு. வலது புறம் திரும்பி சர்தார் படேல் சாலையிலிருந்து வரும் வாகனங்களுடன் சேர்ந்து கொண்டு வேளச்சேரி சாலைக்குப் போக வேண்டும் வேளச்சேரி நோக்கிப் போக வேண்டியவர்கள். சில கிலோமீட்டர்கள் கூடுதலாக சுற்ற வேண்டியிருந்தாலும், எங்கும் தேங்காமல், காத்திருக்காமல் நான்கு சாலை நிறுத்தங்களை முற்றிலும் ஒழித்து விட்ட இந்த ஏற்பாடு ஏதோ கனவுலகம் போலத் தோன்றியது. வேளச்சேரியிலிருந்து வந்து அடையாறு போக

மக்கள் தொலைக்காட்சியில் சந்திப்பு செய்தி! -வீடியோ

தகவல் தந்த அண்ணன் வடூவூராருக்கு நன்றி! நன்றி :- மக்கள் தொலைக்காட்சி 22ஆம் தேதி சென்னை வலைபதிவர் சந்திப்பு பற்றிய மற்ற பதிவுகள்: 1. அபி அப்பா 2. இட்லிவடை 3. மா.சிவகுமார் 4. மிதக்கும்வெளி 5. லக்கிலுக் 6. பொன்ஸ் 7. வடுவூர் குமார் 8. பாலபாரதி 9. ஓசை செல்லா

பதிவர் சந்திப்பு - சில பதிவுகள்

கண்ணதாசன் பதிப்பகம் என்ற பலகை வைத்திருந்த தெருவினுள் நுழைந்து வண்டியை பூங்காவின் பின் வாசலில் நிறுத்தி விட்டு நுழைந்தேன். வெயில் இன்னும் தாழ்ந்திருக்கவில்லை. சிமென்டு பாவியிருந்த நடைபாதை வழியே சுற்றிக் கொண்டு வந்தால், தூரத்தில் பளபளக்கும் மொட்டைத் தலை தென்பட பாலபாரதியின் இருப்புப் பளிச்சிட்டது. பாலா, சிறில் அலெக்ஸ், உண்மைத் தமிழன் உட்கார்ந்திருந்தார்கள். வழக்கமான இடத்துக்குச் சற்று தள்ளி நிழலில் இருந்தார்கள். சிறில், இப்போது பழகிப் போனபடி, உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். (அருகிலிருந்த நிழல் மேடையில் இன்னொரு குழுவின் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது.) வெயில் குறையும் வரை இங்குதான் உட்கார வேண்டும். பாலா சரியாக மூன்றரை மணிக்கு சந்திப்பை ஆரம்பித்து விட்டார். தனியாகப் பேசிக் கொண்டிருந்த போஸ்டன் பாலா, விக்கி, ஐகாரஸ் பிரகாஷும் சேர்ந்து கொள்ள அதற்குள் ராமகி ஐயா, தருமி ஐயா, பாலராஜன் கீதா, வந்து சேர்ந்து விட வட்டம் பெரிதாகியிருந்தது. அப்போதே பத்து பேருக்கு கிட்ட சேர்ந்து விட்டோம் என்று நினைவு. முதலில் சாகரனுக்கு அஞ்சலி செலுத்தும் சிறுமலர் வெளியீடு, நான் கொடுக்க பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்.

சென்னை சந்திப்பு - 22 ஏப்ரல் - 2

சென்னபட்டினம் குழுவின் மூலம் இதுவரை மூன்று வலைபதிவர் சந்திப்புகள் நிகழ்த்தியுள்ளோம். நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஆகஸ்ட் 2006 இல் முதல் சந்திப்பு நிகழ்ந்த போது, முத்து தமிழினி, முத்துகுமரன், பரஞ்சோதி, வரவனையான் உள்ளிட்ட வெளியூர்/வெளிநாடு வாழ் பதிவர்கள் கலந்து கொண்டார்கள். அனானி பின்னூட்டங்களால் உருவாகிக் கொண்டிருந்த பிரச்சனை பற்றிய விவாதங்களின் முடிவில் அனானி முன்னேற்றக் கழகம் உருவாக முதலடி இந்தச் சந்திப்பில் தான் எடுத்து வைக்கப்பட்டது. நவம்பர் 2006இல் நிகழ்ந்த அடுத்த சந்திப்பு, தேனாம்பேட்டை பார்வதி ஹாலில் நிகழ்ந்தது. (வி)யெஸ்கே, அகிலன், நிலவன், தமிழ்நதி போன்ற வெளிநாடுவாழ் பதிவர்கள் தவிரவும் பல புதிய பதிவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு அது. தமிழ்வலைபதிவர் உதவிக் குழு இந்தச் சந்திப்பில் உருவம் பெற்றது. தற்போது புதிய பதிவர்களுக்கு உதவியாக செயல்பட்டு வரும் இந்தக் குழுவில் சென்னை பதிவர்கள் மட்டுமல்லாமல் உலகளாவிய பதிவர்கள் பலரும் இருந்து உதவி வருகின்றனர். டிசம்பர் 2006 இல், நடேசன் பார்க்கில் திரு அவர்களின் சென்னை வருகையை ஒட்டி நடைபெற்றது அடுத்த சந்திப்பு. இந்தச் சந்திப்பில் நிகழ்ந்த கருத்துப் பரி

சென்னை சந்திப்பு - 22 ஏப்ரல் - 1

போன ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி நடேசன் பூங்காவில் ஒரு வலைப் பதிவர் சந்திப்பு நடந்தது. கவிஞர் மதுமிதாவைச் சந்திக்க சில பதிவர்கள் போயிருந்தோம். அருள் குமார், வீரமணி, ஜெய்சங்கர், நான், பாலபாரதி, ப்ரியன், சிங் ஜெயகுமார் எல்லோரும் இந்தச் சந்திப்பு முடிந்ததும் அருள் குமாரின் தூண்டுதலால் இரு சக்கர வண்டிகளில் மாமல்லபுரம் போக முடிவு செய்தோம். அந்தப் பயண விபரங்களை ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவர் எழுதி பதிவு செய்தோம். அதைப் படித்த நண்பர்கள் இது போல சென்னையின் வெவ்வேறு பகுதிகளை படம் பிடித்து போடலாம், சென்னை குறித்து எழுத ஒரு கூட்டு பதிவு உருவாக்கலாம் என்று சொன்னார்கள். (சொன்னது மதி கந்தசாமி). பாலபாரதி, பொன்ஸ், அருள் குமார், ஜெய்சங்கர், பிரியன் இவர்களுடன் என்னையும் சேர்த்து ஒரு கூட்டு வலைப்பதிவை உருவாக்கி விட்டார்கள். சென்னப் பட்டிணம் என்று இந்தக் குழுவினர் சேர்ந்து செயல்பட பல திட்டங்களை சொல்வார் பாலபாரதி. அவரது புத்தகக் கடையில் எல்லோரும் சந்தித்தோம். ஒருவர் ஒரு நாள் வீதம் வாரம் ஆறு பதிவுகள் என்று நான் சொன்ன அதி ஆர்வத் திட்டத்தைக் கைவிட்டு மாதம் ஆறு பதிவுகளாவது போடுவது என்று குறைந்த பட்ச செயல் திட்