Posts

Showing posts from January, 2007

முழு சென்னைவாசியாக 50 டிப்ஸ்

இன்னா நைனா? ஊருக்கு புச்சா? மொதல்ல இத படிச்சு கரீக்டா ஃபாலோ பன்னேன்னு வெச்சுக்க, நீ மெய்யாலுமே 100 பர்சன்ட் சென்னைவாசி ஆயிடலாம்... 1. சினிமா சூட்டிங்னு நின்னு வேடிக்கை பார்த்து தொலையாதீங்க. அது நிஜ என்கவுன்ட்டரா இருக்க போகுது. 2. "சென்னைக்கு வந்துட்டோம்டா" அப்படீன்னு ஒரு பெருமிதம் உங்களோட வந்து ஒட்டிக்கும் (ஹி..ஹி..எனக்கு ஒட்டிகிச்சு இல்ல), அந்த பெருமிதத்தோட சென்னைல கால் வைக்கவும். முடிஞ்சா வலது கால வைக்கவும் (BTW, இப்படி யோசிக்கிற நேரத்துல ஏதாவது ஒரு பிக்பாக்கெட் உங்ககிட்ட வேலையை காட்டிடலாம், உசார் மாமே). 3. ஊருக்கு வந்து இறங்கி சென்ட்ரலோ அல்லது கோயம்பேடிலோ வெளியே வந்ததும், மேலே ஏதாவது ஏரோப்ளேன் சத்தம் கேட்டா அங்கேயே நின்னு வானத்தையே அன்னாந்து பார்க்கனும். (எப்படி அவ்ளோ பெரிய ஏரோப்ளேனுக்கு பெயின்ட் அடிப்பாங்கன்னு கேக்கக்கூடாது). 4. "மெட்ராஸ்லல்லாம் ஆட்டோகாரங்க நல்லா ஏமாத்திடுவாய்ங்கடா"-ன்னு எவனாச்சு ஒரு ஃபிரென்டு கண்டிப்பா உங்ககிட்ட சொல்லியிருப்பான். அதனால் கோயம்பேடிலோ, சென்ட்ரலிலோ இறங்கியதும், ஆட்டோ பிடிக்கிறத நிப்பாட்டனும். எவ்ளோ தூரமானாலும் நடராஜா சர்வீஸ், இல்ல

குறும்பட விழா -செ.பு.க 3

சென்னை புத்தக கண்காட்சியின் பிரிவாக, சர்வதேச-தேசிய குறும்படம் மற்றும் ஆவணப் படத் திரைவிழா நேற்று புத்தக கண்காட்சியின் மூன்றாவது நாளில் தொடங்கியது. பபாசி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருக்கும் இந்தத் திரைவிழா, புத்தக கண்காட்சி அரங்கத்துக்கு வெளியே, சுட்டிவிகடனின் குழந்தைகள் அரங்கத்தை அடுத்து A.K. செட்டியார் அரங்கத்தில் நடக்கிறது செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வந்திருந்து தொடங்கி வைத்தார். திரையிடப்படும் படங்கள் பற்றிய விவரம்: முழுமையாக பார்க்க இயக்குனர் சிவக்குமார் பேசுகையில், த.மு.எ.சங்கத்தினரின் முயற்சியில் தமிழக எழுத்தாளர்கள் பலரும் பங்குபெற்ற குறும்பட பயிற்சிப் பட்டறை போன வருட இறுதியில் நிகழ்ந்தது என்றும், அதன் தொடர்ச்சியாக, இளம் தமிழ் எழுத்தாளர்கள் பலரும், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் எடுக்கும் வேலையில் தற்போது மும்முரமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். மீண்டும் பிப்ரவரியில் கூடி இப்படி எடுக்கப்பட்ட குறும்படங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறப் போவதாகவும் தெரிவித்தார். [கண்காட்சி அரங்கத்திற்கு வெளியில் இருப்பதால், அநேகமாக இந்தத் திரைவ

சென்னை புத்தகத் திருவிழா Day - 2

Image
முதல் நாள் படங்கள் இங்கே இரண்டாவது நாள் செய்திக்கு இங்கே

மைலாப்பூர் திருவிழா சில காட்சிகள்

Image
சென்னை மைலாப்பூர் பகுதியில் இயங்கி வரும் மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிக்கையும், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய மைலாப்பூர் திருவிழா ஜனவரி 4 முதல் 7ம் தேதி வரை சிறப்பாக நடந்து முடிந்தது. கரகாட்டம், பொய்க்கால் ஆட்டம், நாடகம், இசை விழா, குழந்தைகளுக்கான போட்டி மட்டுமன்றி, இல்லாத்தரசிகளுக்கான போட்டிகள், கோலப்போட்டி, சமையல் போட்டி என நான்கு நாட்கள் ஒரே ஜமாய் தான். தினமும் அத்திருவிழாவினை கவர் செய்து செய்திகள் தர திட்டமிட்டிருந்தோம். ஆனால் அது நிறைவேறாமல் போனது. தனிப்பட்ட பணிகளினால் குழு உறுப்பினர்கள் அனைவருமே சிக்குண்டு போனோம். அதனால் முழுவிழாவினையும் கவர் செய்ய முடிய வில்லை. அவ்வப்போது எட்டிப்பார்த்து எடுத்த படங்களுடன் இந்த பதிவு. மைலாப்பூர் நினைவு படுத்தும் புகைப்பட கண்காட்சி நடந்தது. கடந்த வருட புகைப்படத்தில் ஆர்வத்துடன் தன்னைத் தேடும் தேடும் ஒருவர். புகைப்படங்களை பார்வையிடும் மக்கள். அதே மக்கள் தான் வேறு நிமிடங்களில்.. :) கட்டைகால் நடனம். படம் உதவி தினமலர். கோலம் போடும் வெளிநாட்டுப் பெண்மணி. படம் உதவி: தினமலர் கோலமிடும் அழகு. லாங்க் ஷாட்! சின்னசிறு கைவினைப் பொருட்களுக்காக கடைதிற

122 ஆண்டு பழமையான வாத்தியகருவி!

Image
சென்னை கோட்டை கிறிஸ்தவ கோவிலில் 122 ஆண்டு பழமையான வாத்திய கருவி மீண்டும் இசைக்கப்படுகிறது இங்கிலாந்தில் இருந்து நிபுணர் வந்து சரி செய்தார் சென்னை, ஜன.4- சென்னை கோட்டை கிறிஸ்தவ கோவிலில் 122 ஆண்டு பழமையான இசைக் கருவி பழுது பார்க்கப்பட்டு மீண்டும் இசைக்கப்படுகிறது. உலகமெங்கும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கீர்த்தனை, பாமாலை, சங்கீத பாடல்கள் பாடப்படுவது வழக்கம். பாடல்களை பாடும் போது பின்னணி இசைக்கு ஆர்கன் என்ற வாத்தியக் கருவி பயன்படுத்தப்படுகிறது. தேவாலயங்களில் ஆர்கனுக்கு என்று தனி இடம் தரப்படுகிறது. அதுவும் மிகப் புனிதமாக கருதப்படும் `ஆல்டர்' பகுதிக்கு அருகே ஆர்கன் வைக்கப்பட்டு இருக்கும். அதன் முன்னால் பாடகர் குழுவுக்கு இடம் ஒதுக்கப்படுவது வழக்கம். சென்னை கோட்டையில் மிகப் பழமையான தேவாலயம் உள்ளது. செயின்ட் மேரிஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தேவாலயம் 1680-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த தேவாலயத்துக்கு இங்கிலாந்தில் இருந்து ஆர்கன் அனுப்பப்பட்ட வரலாறும் சுவையானது. ஏற்கனவே உள்ள பழைய ஆர்கனை தவிர்த்து விட்டு, செயின்ட் மேரிஸ் தேவாலயத்திற்கென்று புதிய ஆர்கனை வாங்க வேண்டும் என்று 1883-ம் ஆண்டு ம

சென்னை காவல்துறைக்கு வயசு 150

Image
தென்னிந்தியாவில் வாசலான சென்னையின் மாநகர காவல்துறை தன் 150 வருடத்தை ஜனவரி 4-ல் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவது தெரிந்ததே. இதன் ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், காவல்துறைக்கு பொதுமக்கள் மத்தியில் எந்த விதமான மதிப்பு இருக்கிறது என்று பார்த்தால், நிலைமை சொல்லிக் கொள்கிறார் போல இல்லை தான். ஆனால், கடந்த 2-3 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையோடு ஒப்பிட்டு பார்த்தால், நிலைமை பொதுவாக ஒரு முன்னேற்றம் காணாப்படுகிறது என்றே சொல்லலாம். பெரும்பாலும் காவல் துறையின் மீது சொல்லப்படும் குற்றங்கள் லஞ்சம், முரட்டுத்தனம் என்று பல குற்றச்சாட்டுக்கள். 70 இலட்சம் மக்கள் தொகை கொண்ட நகரம். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24000+ மக்கள் வசிக்கின்றனர். பொது மக்களின் நண்பனாக இருக்க வேண்டிய காவல்துறை மக்களின் வில்லனாகிப் போனது வேதனை தான். "ஒரு போலீஸ் என்ன துரத்தி வந்துச்சு" "அப்புறம்?" "நல்ல வேளை. ஒரு ரெளடி என்னை காப்பாற்றினான்" - போன்ற துணுக்குகள் சர்வ சாதா'ரண'மாக வெளிவந்துக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் தான் முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான நடராஜ் சென்னை காவல்துறை ஆணைய

ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

Image
இனிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பாக '2007 ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!' நாட்காட்டி உதவி:- இங்கேயிருந்து..