Posts

Showing posts from November, 2006

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

Image
சரியாக நான்கு மணிக்கு, இராம.கி அவர்களின் தலைமையில் பாலபாரதியின் முன்னுரையுடன் இனிதே தொடங்கியது சென்னை வலைபதிவர் சந்திப்பு. சந்தித்தவர்கள் விவரம் பின்வருமாறு: அருள்குமார் we the people இராம.கி ஜெ.சந்திரசேகரன் லக்கிலுக் த.அகிலன் தே. நிலவன் வினையூக்கி ஓகை நடராஜன் யெஸ். பாலபாரதி ப்ரியன் தமிழ்நதி பா.ஜெயகமல் கோ. சரவணன் இரா.சமு.ஹமீது எச்.எஸ்.முகமது ரஃபி ரோசாவசந்த் சிமுலேஷன் எஸ்கே பொன்ஸ் மிதக்கும்வெளி தங்கவேல் டிபிஆர் ஜோசப் சிவஞானம் ஜி செந்தில் கௌதம் விக்னேஷ் மரவண்டு கணேஷ் (சந்திப்புப் பதிவேட்டின் வரிசைப்படியே..) பதிவேட்டில் பெயர் எழுதாமல் விட்டுப் போனவை:) டோண்டு பூபாலன் விஜய் - இட்லிவடையின் நிழற்பட வல்லுனர் வலைதிரட்டிகளின் அடுத்த நகர்வு என்ற தலைப்பில் மா.சிவகுமாரின் கட்டுரை வாசிப்பைத் தொடர்ந்து அது குறித்தான ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன. கணினித் தொழிற்நுட்பம் தெரிந்த பதிவர்கள் சேர்ந்து உதவி மையம் ஒன்று தொடங்கலாம் என்றார் விக்கி. அது குறித்த அறிவிப்பொன்று விக்கியின் பதிவில் விரைவில் வரும். சுமார் நாற்பதைம்பது பேரை எதிர்பார்த்து தேநீருக்குச் சொல்லி இருந்தபடியால், முதல் சுற்றுத் தேநீர் வினியோகம்

யாராச்சும் லாலுவுக்கு சொல்லுங்கப்பா..!

Image
செ ன்ட்ரல் ரயில் நிலையத்தின் பார்சல் குடோன் சூளை பகுதியில் அமைந்துள்ளது. அதன் மொத்தப் பரப்பளவு நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் அளவு இருக்கும். ஆங்கிலேய அரசுகாலத்தில் ரேசன் பொருட்களுக்கான குடோனாக பயன் படுத்தப்பட்டு வந்த இடம், இன்று மத்திய ரயில்வேயின் பொருட்கள் பாதுகாப்பு இடமாக மாறிப்போய் இருக்கிறது. இப்போதும் கூட இரண்டு பகுதிகளாகவே செயல் பட்டு வருகிறது. ஒரு பகுதி ரேசன் பொருட்களின் பாதுகாப்பிற்கும், மற்றொரு பகுதி நாட்பட்டுப்போன ரயிவே பார்சல்களை பாதுகாக்கவும். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பார்சல்கள் இருபது நாட்களுக்கு மேல் டெலிவரி எடுக்காமல் இருந்தால் இந்த குடோனுக்கு அனுப்பப்படுகின்றன. மெயின் கேட்டில் இருந்து ஐநூறு அடிகள் கடந்து வந்தால் தான் இந்த பார்சல் குடோனை அடைய முடியும். சமீபத்தில் பெய்த மழையால் இந்த பகுதி நீச்சல் குளம் போல காட்சி தருகிறது. கால் முழங்கால் முட்டி வரை சேற்றில் இறங்கி நடக்க வேண்டியும் உள்ளது. உள்ளே போக வேறு வழிகள் இருப்பதாகவும் தெரியவில்லை. தவிரவும் பத்துக்கும் அதிகமான ப்ரோக்கர்கள் உள்ளுக்குள்ளேயே இருக்கிறார்கள். நாம் போய் நின்றால் போதும், கையில் இருக்கும் ரசீதைப்