Posts

Showing posts from September, 2006

"சென்னை நமது பெருமை"

ஒரு நகரம் பெரு நகரமாக வளம் பெற என்ன வேண்டும்? நகருக்கு என்று ஒரு அடையாளமும், அதன் மீதான ஒவ்வொருவரின் பெருமையும்தான் ஒரு மாநகர வாழ்க்கையை நிலை பெறச் செய்ய முடியும். சென்னையில் வசிப்பவர்களில் நிறைய பேருக்கு இது சோறு போடும் இடம். 'பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டால், ஓய்வு பெற்று நம்ம ஊரில் போய் கடைசி காலத்தைக் கழிக்கலாம்' என்று வாழ்பவர்கள் உண்டு. சென்னையையே தமது ஊராகக் கொண்டு சென்னையில் பெருமை கொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை இப்படி சகித்துக் கொண்டு வாழ்பர்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகத்தான் இருக்கும் என்று படுகிறது. சென்னையின் பெருமை உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையோ, வள்ளுவர் கோட்டமோ, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியோ மட்டும் இல்லை. இவற்றை எல்லாம் உள்ளடக்கியது இன்னும் மேலானது இங்கு வாழும் இங்கு வந்து போகும் மக்களின் பங்களிப்பு. அதற்கு ஒரு அடையாளம் வேண்டும். மும்பைகார், அம்சி மும்பை, சிட்டி ஆஃப் ஜாய் (கல்கத்தா), கார்டன் சிட்டி (பெங்களூர்) என்று சென்னைவாசிகளுக்கு ஒரு அடையாளம் இருக்கிறதா? அந்த அடையாளத்தில் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள முடியுமா? அந்த அடையாளம் நீண்ட கால நோக்கில் நிலைத்த

சென்னை : சிலிகான் சமவெளி

Image
சென்னை கடந்த நான்கு வருடங்களாக ஒரு மிகப்பெரிய சிலிகான் புரட்சியை அமைதியாக செய்து வருகிறது... ஆறு மாதங்களுக்கு முன் எடுத்த ஒரு சர்வேயில் 2005-2006 ஆண்டில் மட்டும் நம் சென்னையில் மென்பொருள் நிறுவனங்களுக்கு சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் சதுர அடி அளவுக்கு கட்டமைப்பு தேவைகள் என CMDAவிடம் விண்ணப்பித்துள்ளன. அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டு, தற்சமயம் சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள இடங்களில் அவை விண்ணைத் தொடும் கட்டிடங்களாக வளர்ந்துவருகிறன. இன்று சென்னையில் வளர்ந்துவிட்ட மென்பொருள் நிறுவன கட்டிடங்களும், கட்டப்பட்டுவரும் மென்பொருள் நிறுவன கட்டிடங்களும் மேலே உள்ள சென்னை வரைபடத்தில் பார்க்க முடியும். இனி சென்னையில் வானளாவிய, விண்ணைத் தொடும் கட்டிடங்களும் (Skyscrappers) சாதாரண விசயமாக விரைவில் ஆகக்கூடும். CMDAவிடம் அனுமதி பெற்று கட்டப்பட்டு வரும் பலவற்றில் ஒரு சில வரைவு படங்கள் எனக்கு சிக்கின. அவை உங்கள் பார்வைக்கு. ஒரு ஹைடெக் நகரமாக மாறப்போகும் சென்னை, இனி நம்மை மட்டும் அல்ல, அனைத்து மென்/கணிப்பொறி நிறுவனங்களை தன் வசபடுத்தப்போகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை. குறிப்பிடும்

ஹலோ! சென்னை கால் டாக்ஸி!

Image
ஒரு காலத்தில் சொந்த வாகனமில்லாத சென்னை மக்கள், தனியார் போக்குவரத்துக்கு ஆட்டோக்களை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தர். ஆனால் சென்னை நகரை இன்று ஆள்வது கால் டாக்ஸிக்கள். ட்ராவல்ஸ் கார்கள் போல் அல்லாமல், கூப்பிட்ட இடத்துக்கு கூப்பிட்ட நேரத்துக்கு வந்து நிற்கும் கால் டாக்ஸி சேவைகள் தொடங்கியது 2000த்தில் தான். வியாபார நிலையங்கள், ஆபரணங்கள், மருந்து விற்பனை என்று பல தளங்களிலும் கால் பதித்திருந்த பாரதி(BARATHI) நிறுவனம் தான் சென்னையின் முதல் கால் டாக்ஸி நிறுவனம். 2000ல் 36 கார்களுடன் தொடங்கிய இந்த நிறுவனத்துக்கு இன்று இருநூறுக்கும் அதிகமான சிற்றுந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறன. பாரதி நிறுவனத்தின் கார்கள் எல்லாமே மாருதி ஆம்னி மட்டுமே. சிறு இடைவெளிகளிலும் புக முடிந்த அமைப்பு, நான்கு பயணிகள் வரை இருக்கை வசதி, பொருட்களை அதிகம் எடுத்துச் செல்ல முடிந்த வசதி, என்பதோடல்லாமல், ஆம்னி வண்டிகளில் வயர்லெஸ் வகைக் கருவிகள் பொருத்தவும் வசதி இருப்பது ஒரு காரணம். சென்னையின் மற்றொரு குறிப்பிடத் தகுந்த கால் டாக்ஸி நிறுவனம் பாஸ்ட் ட்ராக்(Fast Track). 2001இல் செயல்படத் துவங்கிய இந்த நிறுவனத்தின் மேலாளர் துரைராஜனுக்கு,

சென்னை:புராதன முருகன் ஆலயம் கண்டுபிடிப்பு

Image
தமிழகத்தில் சங்க காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் முருகன் கோயில் ஒன்றின் இடிபாடுகளை இந்திய அகழ்வாரய்ச்சியாளர்கள் கண்டுபிடி த்துள்ளனர். நிலத்துக்குக் கீழ் ஆலயம் மகாபலிபுரத்துக்கு வடக்கே சாலாவான் குப்பம் என்னும் இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த ஆய்வாளர்கள் அங்கு சுனாமி தாக்குதலுக்கு பின்னர் மண்ணின் அடியில் இருந்து வெளிவந்து காணப்பட்ட ஒரு கல்வெட்டை கண்டுள்ளனர். அகழ்வு வேலைகள் தொடருகின்றனஅதில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு படையெடுத்து வந்து, ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள் அங்கிருந்த ஒரு கோயிலுக்கு மானியங்கள் வழங்கியதாகக் கூறப்பட்டிருந்தது. அதனை அடுத்து அங்கு ஆய்வு நடத்திய போது, அந்தப் பகுதிக்கு அருகிலே மண்ணில் புதைந்த நிலையில் ஒரு முருகன் ஆலயத்தைக் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அகழ்வு வேலைகள் தொடருகின்றன அகழ்வுப் பணியில் மும்முரம்ஆனால் ஆய்வுகளை அவர்கள் தொடர்ந்த போது, அந்த கோயிலின் அடியில் மேலும் மண்ணில் புதைந்த நிலையில் மற்றொமொரு கோயிலும் காணப்பட்டுள்ளது. அகழ்வுப் பணியில் மும்முரம் அதாவது முதலில் பல்லவர்களால் சங்க காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயில், சுனாமி அலைகளால் சே

இணையம் குறித்து சென்னையில் மாநாடு

Image
இணையம் குறித்து சென்னையில் மாநாடு இணையத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும் முறையினை பிரதிபலிக்கும் வகையில் மாநாடு பிளாக்கிங் தகவல் பரிமாற்ற முறை வேகமாக பரவி வருகின்றது இணையதளத்தில் தகவல்பரிமாற்றம் நடைபெறும் முறையின் எதிர்காலநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தமிழகத் தலைநகர் சென்னையில் செப்டம்பர் மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் தேதிகளில் தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படும் இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் பிளாக்கிங் என்கிற நடைமுறை தற்போது அதிவேகமாக பிரபலமடைந்துவருகிறது. இதை தமிழில் வலைப்பதிவுகள் என்றும் வலைப்பூக்கள் என்றும் வலைப்பின்னல்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள். பத்திரிகைத்துறையின் ஆரம்பகாலகட்டத்தில் கையெழுத்துப்பிரதிகள் நடத்தப்பட்டன. அதாவது தனிமனிதர் ஒருவர் தனக்கு பிடித்த விடயங்கள் பற்றிய தனது கருத்துக்களை கையால் எழுதி தனிச்சுற்றுக்கு விடுவது கையெழுத்துப்பிரதியாக விளங்கிவந்தது. ஏறக்குறைய அதேபோன்றதொரு விடயம் தான் இணையத்தில் வலைப்பதிவுகளாக உருவெடுத்திருக்கிறது. இந்திய அளவி

Sub-way கலாட்டா

இரு வாரங்களுக்கு முன்பு, வார விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு கோவை விரைவுவண்டியில் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தேன். இரவு சுமார் 9:45 மணி இருக்கும். சென்னை மத்திய இரயில் நிறுத்தத்தில் இருக்கும் சுரங்க வழியில் புகுந்து, சுரங்கத்தில் சாலையை கடந்து, தாம்பரம் நோக்கிச் செல்லும் இரயில் பிடிக்க சுரங்க பாதையை உபயோகித்தேன். சுரங்கப்பாதையை உபயோகித்து சாலையை கடக்க வேண்டும் என்பது இலக்கு. நடந்தது? அன்று என்ன ஆயிற்றோ? சுரங்கப்பாதை உள்ளே மின்சாரம் இல்லை. ஒரே (ஒரு?) இருட்டு. சுரங்க பாதையை உபயோகிப்பவர்கள் உள்ளே தங்கள் கைபேசியில் இருக்கும் சிறு வெளிச்சத்தின் மூலம் கடந்தார்கள். கைபேசி இல்லாதவர்கள், அடுத்தவர் வெளிச்சத்தை இரவல் வாங்கி உபயோகித்தார்கள். அதுவும் உள்ளே கடப்பவர்களைப் பார்க்க வேண்டுமே. உள்ளே இறங்கியதும் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். எல்லாம் திருட்டு பயம் தான். அது அவர்கள் நடையில் நன்றாகவே தெரிந்தது. எனக்கோ geographical பிரச்சினை. கண்ணை கட்டி ஒரு சுற்று சுற்றி விட்டால் எந்த திசையில் இருக்கிறோம் என்பதே தெரியாது. (இந்த பிரச்சினை பெரும்பாலும் பெண்களுக்கு அதிகமாம்). சுரங்க அமைப்புப் படி, நான் ச

குழந்தை எழுத்தாளர் திருவிழா - சென்னை

Image
சென்னையில் குழந்தை எழுத்தாளர் திருவிழா என்ற அறிவிப்பு எங்கள் அலுவலக மடலில் வந்த போதே இதற்குப் போயே தீர்வது என்று முடிவெடுத்துவிட்டேன். சென்னை ராணி மேரி கல்லூரியில் சனி ஞாயிறு என்று இரண்டு நாள் திருவிழாவாக நடந்த இந்த நிகழ்ச்சி, குழந்தை இலக்கியம் எழுதும் எழுத்தாளர்களுக்கான விழா அல்ல. கதை எழுதுபவர்களே, 8 முதல் 14 வயதான குழந்தைகள் தான் - தமிழகத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சின்னஞ் சிறு குழந்தைகள். மூன்று மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் கிராமங்களிலும் சேரிகளிலும் கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வ அமைப்பான எய்ட் இந்தியா , குழந்தைகளுக்கான சிறுகதைப் போட்டிகளை நடத்தியது. தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தோறும், சுமார் 15000 குழந்தைகள் போட்டிகளில் கலந்து கொண்டனர். கிராமம், வட்டாரம், மாவட்டம் என்று பல நிலைகளில் வெற்றி பெற்ற சுமார் 180 குழந்தைகளுக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் இரண்டு நாள் பயிலரங்கங்கள் கடந்த சனி, ஞாயிறில் நடந்தன. பொம்மை செய்தல், கணித விளையாட்டுக்கள், எளிய அறிவியல் பரிசோதனைகளைப் பற்றிய விளக்கங்கள், காகித மடிப்புக் கலை, இசையும்

உறவின் அழைப்பு!!!

Image
நாகேஸ்வர ராவ் பூங்கா, மயிலாப்பூர் ஊரல்ல, உறவாகவே கலந்துவிட்ட சென்னையின் இதயப் பகுதியில் வலைபதிவர் சந்திப்பு... மயிலையின் நாகேஸ்வர ராவ் பூங்காவில் மாலை 5.45 மணி முதலே உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்.. முன்னறிவிப்புகளும், வார இறுதி நாட்களிலும் வைத்திருக்கலாம் என்னும் நண்பர்களின் வருத்தங்கள் புரிந்தாலும், திடீரென ஏற்பாடாகி விட்டன எல்லாமும்... வழியும், பிற விவரமும் வேண்டுமெனின், நண்பர்களைத் தொடர்பு கொள்ளலாம் : பாலபாரதி - 99400 45507 குப்புசாமி - 98409 84328 போன அறிவிப்புப் பதிவில் நேர்ந்துவிட்ட தவறுகள் இந்த முறையும் நேராமல் இருக்க, அனானி பின்னூட்டங்கள் அறவே நிறுத்திவைக்கப் படுகின்றன. அனானி பின்னூட்டங்களினால் மனம் வருந்திய அன்பர்களுக்கும் எங்கள் மன்னிப்புகள்.