Posts

Showing posts from August, 2006

சென்னைக்கு பர்த் டே

Image
இன்று, சென்னையின் வயது 367 இன்னும் சில ஆண்டுகளில் சிலிகான் நகரமாக மாறிவிடும் என்று சொல்லும் அளவுக்கு மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது சென்னை நகரம். நீண்ட வரலாறு பழைய சினிமா படங்களில் சென்னையைக் காண்பிக்கும்போது சென்டிரல் ரெயில் நிலையத்தையும் அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தையும் காட்டுவார்கள். இன்று எல்.ஐ.சி. கட்டிடத்தை விட உயரமான பெரிய பெரிய கட்டிடங்களையும், கம்ப்ïட்டர் நிறுவனங்களையும் ஆங்காங்கே பார்க்கலாம். குதிரை வண்டிகள் ஓடிய அண்ணா சாலையில் இன்று விதவிதமான வெளிநாட்டு சொகுசு கார்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன. வானளாவிய உயர்ந்த கட்டிடங்களையும், நவீன வசதிகளையும் கொண்டுள்ள செனëனை நகரம் உருவான வரலாறு நீண்ட நெடியது. ஆகஸëட் 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு 367 வயது ஆகிறது. சென்னையை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் ஆகிய இருவரும்தான் சென்னையை உருவாக்கியவர்கள். இப்போதைய சென்னை அந்த காலத்தில் `சென்னப்பட்டினம்' என்றும், `மெட்ராஸ்பட்டினம்' என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்பு மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக

ஏன் இந்த வலைப்பூ?

Image
செ ன்னை பற்றிய புள்ளிவிவரங்களும் தகவல்களும், எளிதில் பல இடங்களில் உங்களுக்குக் கிடைக்கலாம். அது மட்டுமல்ல எங்கள் நோக்கம். நாம் விரும்பும் சென்னையை, நாம் அறிந்த சென்னையை, உணர்வுபூர்வமாகச் சொல்ல ஆசைப்பட்டதன் விளைவே இந்த வலைப்பூ. பொதுவாக ஏதாவது வேலை விஷயமாக சென்னை வரும் நண்பர்கள், ஒன்றிரண்டு நாட்கள் சென்னையில் தங்கி, அதற்காக மட்டுமே அலைந்து திரிந்து, வந்தவேலை முடிந்தோ முடியாமலோ கிளம்பிப் போகும்போது சொல்லிவிட்டுப் போகும் ஒரு வசனம் - "ச்சே... ச்சே... எப்படித்தான் இந்த ஊர்ல இருக்கீங்களோ...?" அப்போதெல்லாம் அவர்களுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பதென்று தெரியாது. 'வந்த வேலையை முடிக்க மட்டுமே அலைஞ்சா, சென்னை மட்டுமல்ல, எல்லா ஊருமே இப்படித்தான் இருக்கும்...' - இது நான் என் நண்பர்களுக்குச் சொல்வது. இனி இதைமட்டும் சொல்லாமல் இந்த வலைப்பூவை அவர்களுக்குப் பரிந்துரை செய்யலாம்! சென்னை என்பது ஒரு ஊர் மட்டுமல்ல. அது ஒரு உறவு! இதனை இந்த வலைப்பூ உணர்த்தினால் அதுவே எங்கள் மகிழ்ச்சி :) இன்னதென்று வகைப்படுத்த முடியவில்லை. சென்னை தரும் அனுபவங்கள் அனைத்தும் இங்கு வரலாம். நல்ல விஷயங்கள் மட்டுமல்ல.

ஓல்டு சென்னபட்டிணம்...

Image
இன்று வரை திருக்குறள் எத்தனை முறை பதிப்பிக்கப் பட்டிருக்கிறது என்ற கணக்கு அனேகமாக இருக்காது. ஆனால் நல்ல விசயத்திற்கு மக்களின் ஆதரவு என்றும் உண்டு. அது போல இந்த படங்களை பலரும் பார்த்திருந்தாலும்.. மீண்டும் ஒரு முறை பதிவு செய்வதில் மகிழ்கிறேன். *********** படம் தேடும் சிரமத்தை குறைத்த நண்பர் சீனு வுக்கு நன்றி!